பறை என்னும்
இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர்
வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த கேள்வி
5 ஆம் வகுப்பு படிக்கும் போதே எனக்குள் உருவானது. விடை தேடியலைகின்றேன்.
அரசர்கள்
வாழ்ந்த காலத்தில் தகவல் சொல்லுவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது. அப்போது அதற்க்கு
முரசு என்ற பெயரும் இருந்திருக்கின்றது. போர் குறித்த தகவல் பரிமாற்றத்திற்க்கு முரசு
பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
பொதுவாக
நடக்கும் ஊர் திருவிழாக்கள், மற்றும் சடங்குகள் போன்ற நிகழ்ச்சியில் பறை இசையின் சத்தம்
ஒரு செய்தியின் அடிப்படையில் இருக்கும். பறை இசைக்கப்பட்டால் அங்கு ஓர் நிகழ்வு நடக்கின்றது,
நாம் அணைவரும் அங்கு செல்ல வேண்டும் என்ற புரிதலை உருவாக்குவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது.
அண்மை
காலத்தில் கூட அரசினர், தங்களின் அறிவிப்பை செய்வதற்க்கு கிராமந்தோறும் தண்டோரா போடுவார்கள்.
அந்த தண்டோராவை வருவாய்துறையின் கடைநிலை ஊழியராக இருக்கும் சிப்பந்தி போடுவார். பெரும்பாலான
சிப்பந்திகள் தாழ்த்தப்பட்ட சாதியினராகவே இருப்பர். இந்த தொழில் செய்ய மற்ற சாதியினர்
விரும்ப மாட்டார்கள் காரணம் அந்த தொழிலில் தண்டோரா என்னும் பறை இசை கருவியை இசைக்க
வேண்டியிருக்கும். அரசு பணியில் ஓளிந்திருக்கும் சாதிய மனோபாவம் இது.
அரசரின்
ஆணைகளை பரப்புவதால் கூட பறையன் என்ற சொல்லால் குறிக்கப்ட்டிருக்கலாம். ஆனால் அது பறை
என்னும் தொழில் கருவின் நிமித்தமாக வந்த பெயராக கூட இருந்திருக்கலாம். பறை என்பது ஒரு
தொழில் கருவி. அந்த தொழில் கருவி பிற்காலத்தில் சாதியத்தை கட்டமைக்கும் இழிவுக்கு பயன்படுத்தப்பட்டு
இன்று இழிநிலை கருவியாக கட்டமைக்கப்ட்டிருக்கின்றது.
தமிழ்
நாட்டின் புவியியல் அடிப்படையில் 5 வகை நிலமாக பிரித்து அதற்கென ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி
சொல்லும் தமிழ்
கூட பறை
வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவை
குறிஞ்சி
நிலத்தில் ,
1. தொண்டகச் சிறு பறை
2. சிறை பறை முரகியம்
முல்லை
நிலத்தில்,
1. தடாரிப் பறை
2. ஆகோள் பறை
மருத
நிலம்,
1. திணைப் பறை
2. வைகறைப் பறை
நெய்தல்
நிலம்,
1.
ஆரிப்பறை
2.
சாப்பறை
பாலை நிலம்,
1.
ஆரெறிப்பறை
2.
சேக்கோள் பறை
போன்ற பறை இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இன்று இந்த பறை இசை கருவிகளில் பல இல்லாது வழக்கொழந்து போய் இருந்திருக்கலாம்.
தற்ப்போது இசைக்கப்டும் பறை இசை கருவிகள்,
1.
சிறுபறை
2.
கிடுகட்டி
3.
சட்டிப்பறை
4.
ஒரு புறப் பறை
5.
இரு புறப் பறை
6.
தமுக்கு
7.
பெரும்பறை
8.
முரசு. இவைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
பறையில் அடிக்கப்படும் அடி நிகழ்வுக்கு நிகழ்வு மாறுபடும்
அவை
1.
சாமி புறப்பாட்டு அடி
2.
சப்பாத்து அடி
3.
சாவு அடி
4.
கோடி வாழ்த்து அடி
5.
நக்கல் அடி
6.
நையான்டி அடி
7.
உருட்டு அடி என்ற வகையில் அடி வகைகளும்
இருக்கின்றன.
இவற்றில் இருந்து பறையிசைக்கென்று ஒரு தனி வரலாறு
உண்டு என்ற செய்தி எல்லோருக்கும் புரிந்தாலும், தோலிசை கருவிகளில் முதல் கருவி , மூத்த
கருவி பறை என்று வகைப்படுத்தப்பட்டாலும், பறையன் இசைப்பதாலே இந்த கருவிக்கு பறை என்று
பெயர் வந்த்து என கருதி இழிவாகப் பார்க்கும் மனோபாவம்தான் இங்கு அதிகம்.
தவில், மிருதங்கம், உறுமி, பம்பை, போன்ற தோல் இசைக்
கருவிகளுக்கு கற்பிக்கப்கப்படும் புணிதம் பறைக்கு கற்பிக்கப்படுவதில்லை. அரசு வழங்கும்
சலுகைகள் வழங்குவதில்லை.
சிறந்த மிருதங்க இசை கலைஞனுக்கு ”கலைமாமணி
பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. சிறந்த தவில் இசை கலைஞருக்கும் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது,
உறுமி இசைக்கலைஞனுக்கும் அங்கிகாரம் இருக்கின்றது. பம்பை இசை கலைஞருக்கும் அங்கிகாரம்
இருக்கின்றது. ஆனால் ஏன் ஒரு பறை இசை கலைஞனுக்கு ” கலைமாமணி
பட்டமோ, லட்சம்ரூபாய் பொற்கிழியோ சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன , அரசியல் சட்டத்தின் மூலம் சாதி ஒழிப்பை
நிலைநாட்டிய அரசாங்கம் தரவில்லை என்றேனும் பறை இசை கலைஞர்கள் இதற்காக போராடியிருப்பார்களா?
பறைஇசை கலைஞர்களுக்காக எந்த அரசியல், சமுக இயக்கத்தின் தலைவர்கள்
இதை முன்னெடுத்து இருப்பார்களா? ஏன் இதை செய்ய வில்லை.?
பறை இசை தவிர்த்த மற்ற தோல் இசை கலைஞர்களுக்கு அரசாங்கம் நலிந்த
கலைஞர்களுக்கான மாத ஊதியம் தருகின்றது. ஆனால் பறைஇசை கலைஞர்களுக்கு ஏன் அது தர மறுக்கின்றது.
மற்ற கலைஞர்கள் தங்களின் இசை கருவியோடு பயணம் செய்தால் பயணச் சலுகை வழங்குகின்றது.
ஏன் பறை இசை கருவியோடு ஒரு பறை இசை கலைஞன் பயணம் செய்தால் அந்த சலுகை வழங்கப்படுவதில்லை.
பறை இசைக் குறித்தும், பறையர் சாதியைக் குறித்தும் பெருமை பேசுவோர்
தமது சாதியின் இசை கருவிக்கு உரிய அங்கிகாரத்தை பெற்றுத் தர போராடுங்கள். அதை விடுத்து வீண் பெருமை பேசி, காலத்தை கழிக்க
வேண்டாம்.
No comments:
Post a Comment